Sunday, February 24, 2013

பெண்கள் உரிமையாம்...

ஃபேஸ்புக்கில் சில வி.ஐ.பி.க்களைப் பற்றி அவர்களை புத்தகத்தில் மட்டுமே அறிந்தவர்கள் ``ஆஹா...ஓஹோ...’’ என்று எழதும்போது சிரிப்பாகவரும்.ஒருத்தரைப் பற்றி மட்டும்...

பெண்கள் தினத்துக்காக அந்தப் பெண்ணைப் பேசச்சொல்லலாம் என நினைத்தேன்.மிக அமைதியான,இனிமையான பெண்மணி...ரொம்ப நல்லமாதிரி.என் பெண் பிறந்த அதே நாளில்தான் அவருக்கும் குழந்தை அதே ஆஸ்பத்திரியில் பிறந்தது.அப்போதெல்லாம் அங்கே வந்து வந்து நிற்கும் கணவனை நர்ஸ்கள் திட்டி தீர்ப்பார்கள்...``தடிமாடு மாதிரி வந்து நிற்கறான்.வேற பொம்பளைய அனுப்பினா என்ன’’ என்று.அப்போது அவர்களுக்கு யாரும் இல்லை...அது ஒரு காலம்...

சரி...அவரைக் கூப்பிட ஃபோன் செய்தேனா...ஃபோனை எடுத்த அவரிடம் விஷயத்தைச் சொன்னவுடன் சீறித்தீர்த்து விட்டார்``பெண்கள் உரிமையாவது,சுதந்திரமாவது..அதெல்லம் என்னால் வரமுடியாது’’

எனக்கு ஆச்சர்யம்,இந்த இனிமையான பெண்ணா இப்படிப் பேசுகிறார் என்று...விட்டுவிட்டேன்...ஒரு மணி நேரம் கழித்து அவரே கூப்பிட்டார்...``ஸாரி..மஞ்சுளா...நான் அந்த நேரத்தில ரொம்ப விரக்தியில் இருந்தேன்...மன்னிச்சுக்கங்க...’’என்றார்.``பரவாயில்லைம்மா...’’என்றேன்

அடிக்கடி அவரைப் பற்றி நினைத்துக் கொள்வேன்,எத்தனை. திறமை வாய்ந்த பெண்மணி என்று...அவர் கணவர் பெண்ணுரிமைப் பற்றியெல்லாம் ரொம்பப் பிரமாதமாகப் பேசுவார்...! 

No comments:

Post a Comment