Monday, February 25, 2013

குரலுக்குப் பின்னால்...

இன்னொரு வி.ஐ.பி.யின் மறுபக்கம்...இவர்கள் எல்லோரும் நிகழ்ச்சி நடத்த அமெரிக்கா போயிருக்காங்க...ரொம்ப சுவாரஸ்யமாக பண்ணுவார் என்பதற்காக அந்த தொகுப்பாளரை அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்.நிகழ்ச்சி பங்கேற்பாளர்களில் ஒருத்தர் `நைஸாக` இவரை   ஓரம்கட்டி,என்ன பேசப்போகிறார் என்று கேட்டிருக்கிறார்.இவர் பாவம் அப்பாவியாக சொல்ல.அதை அப்படியே கொண்டுபோய் மெயின் ஆளிடம் போட்டுக்கொடுத்து,``ஆமாம்...இது உங்க ப்ரோக்ராமா...அவர்தா...’’என்று வேறு ஊதியிருக்கிறார்.ஏற்கெனெவே``மூடு’’மாறும் `அவர்’ தொகுப்பாளரை அழைத்து,``நீ அடுத்து இவர் பாடுவார்’’ அப்படின்னு சொன்னா போதும்’’ என்று சொல்லிவிட்டார்!

என்ன மனுஷங்க...அதற்கப்புறம் அந்தப் போட்டுக் கொடுத்த மனிதரின் உருகி உருகிப் பாடும் குரல் எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது...

No comments:

Post a Comment