Tuesday, February 26, 2013

தொடர்கதையா...சிறுகதையா...

2002-ல் ஒரு திருமணம்,2010-ல் ஒரு திருமணம்...இந்த இடைப்பட்ட எட்டு ஆண்டுகளில் உலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை உறவினர்களின் நடவடிக்கைகளிலிருந்தே புரிந்துகொள்ளமுடிந்தது!அந்த காலகட்டம்தான் ஐ.டி.இண்டஸ்ட்ரி நம் நாட்டில் கால்பதித்த நேரம்...

முதல் கல்யாணத்தில் உறவினர்களின் அந்யோன்யம்,நெஞ்சை நெகிழவைக்கும் ஒத்துழைப்பு...அது ஒரு மறக்க முடியாத அற்புதமான சங்கமம்...அடுத்த எட்டாவது ஆண்டில் நடந்த திருமணத்தில் பலரின் நடவடிக்கைகள் திகைக்க வைத்தது.

அழைப்பு வைக்க ஆரம்பித்த நாளிலிருந்தே இந்த வித்தியாசம் நன்கு தெரிந்தது.மனிதர்களின் மனம் எப்படியெல்லாம் மாறிவருகிறது.டி.வி.பார்த்துக்கொண்டே பதில் சொல்பவர்கள்,யார் யார் எல்லாம் அமெரிக்க விஜயகர்த்தாக்கள்,இந்த இடைப்பட்ட நாட்களில் அவர்கள் வீட்டுத் திருமணத்திற்குப் போனது போகாதது கணக்கெடுப்பு ,என்ன மொய்,எந்தக் காரில் வ்ந்திருக்கிறார்கள்,நம் வீட்டில் யாராவது ஐ.டி.,யில் வேலை... அமெரிக்கா போயிருக்கிறார்களா,...இப்படி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...

-இது ஏதோ ஒருவரின் கதையல்ல...நம் நாட்டில் அநேகம் பேருக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும்.பி.ஈ.,எம்.பி.ஏ. என முடித்து விட்டு இலட்சத்தில் சம்பாதிக்கிறார்கள்.நல்லதுதான். ஆனால் அந்தப் பணம் மனிதர்களை எப்படியெல்லாம் மாற்றியிருக்கிறது! குழந்தைகளையும் கூட என்பதுதான் கொடுமை.உறவினர்களை கூப்பிட்டு வைத்து ஒரு ஃப்ங்ஷன் நடத்த வேண்டும் என்றாலே அலறுகிறார்கள். காரணம் அந்த அளவிற்கு கசப்பான அனுபவங்கள்.

``உறவுகள் தொடர்கதை...’’என ஒரு பாட்டு உண்டு...இப்போது எல்லோரும் சிறுகதையாக முடித்துக்கொள்ளவே விரும்புகிறார்கள்!

No comments:

Post a Comment