Saturday, February 23, 2013

எப்படித் தூங்கமுடிகிறது?

ஏதாவது இடர்ப்பாடோ,கஷ்டமோ வரும்போது இப்பல்லாம் உடனே,`இலங்கையில் அவர்கள் பட்ட\படும் கஷ்டங்களை விடவா ’என மனசு எண்ணுகிறது.இலங்கையில் என்றில்லை உலகில் எங்கும் கொடூரமான தாக்குதல்களை நடத்துகிறார்கள்....ஆசிட் வீச்சு உட்பட...

எனக்கு எப்போதும் தோன்றும்...இவர்களிப்படிச் செய்கிறார்களே...அப்புறமாக அதைப்பற்றி நினைத்து வருத்தம் ஏற்படாதா?ஒரு உயிரை துடிக்கத் துடிக்கக் கொடுமைப் படுத்துகிறார்களே...அந்த உயிரின் கத்தலும்,கதறலும் அவர்களின்காதுகளை,கண்களை விட்டு எப்படி நீங்குகிறது?எப்படி அவர்களால் இரவு தூங்கமுடிகிறது?

என்னால் அந்தப் புகைப்படங்களைக் கூட பார்க்கமுடிவதில்லை...எப்போதும் என் மனதில் ஒரு துயரம்,அந்தக் கண்ணீர்த்துளி தேசத்தின் அப்பாவிப்பெண்களின் நிர்க்கதியான நிலயை நினைத்து...

No comments:

Post a Comment