Sunday, November 28, 2010

பிரபுசாலமனும், பகவத்கீதையும்...

இது என்னடா வம்பான தலைப்பா இருக்கேன்னு தோணுதா?
எப்போ விஜய்டி.வி.யைத் திருப்பினாலும் ஒரு ப்ரோக்ராம் கண்ணில் பட்டுக் கொண்டே இருந்தது.அதிகம் வெளிச்சத்துக்கு வராத நிறைய நட்சத்திரங்கள் பேசியது.
ஒரு கட்சி உழைப்பு,கடுமையான உழைப்பு இருந்தால் முன்னுக்குவரலாம் என்றார்கள்.இன்னொரு கட்சி நாங்களும்தான் கடுமையாக உழைக்கிறோம்,ஆனால் அதிர்ஷ்டம் இருக்கணும் சாமீ என்கிறார்கள்.
ஒருத்தர் நான் பத்துவருஷம் போராடினேன்,அப்புறம் என் முயற்சியால்தான் வாய்ப்பு வந்தது என்பார். எதிரணி அதான் உங்க அதிர்ஷ்டம் என்பார்.இப்படியே மாற்றி மாற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.இதிலே ப்ரபு சாலமன்,நித்யா இப்படி நிறைய பேர்.நீயா,நானா கோபிநாத்தும் தலைப்பை விட்டுப் போய்விடக்கூடாதென்று இதையேதான் பேசிக்கொண்டிருந்தார்.
ஆனால் இடையில் ஒரு அருமையான கருத்து வந்துவிழுந்தது.அதை ப்ரபுசாலமனோ அல்லது அங்கிருந்த வேறு யாரோ சொன்னார்கள். அதற்குத்தான் வருகிறேன்.
``என்னுடைய படைப்புகள் தொடர்ந்து தோல்வியாகவே ஆகிக்கொண்டிருந்தது.நான் யோசித்தேன். என்னை அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று நான் நொந்துகொள்ளவில்லை. எங்கே தவறு செய்கிறேன் என்று அலசினேன்.என்னை நானே ஆராய்ச்சி செய்தேன்.அந்தத் தவறுகள் இல்லாமல் இப்போது படம் எடுத்தேன். இதோ வெற்றி கிடைத்தது.``
இதைத்தான்`செல்ஃப் அனலைசேஷன்` செய்துகொள்`` என்று கீதையில் க்ருஷ்ணன் சொல்கிறார்.பகவத்கீதை என்றவுடன் எல்லாரும் விழுந்தடித்துக்கொண்டுஓடிவிடுகிறார்கள்,ஏதோ ப்ரீச் பண்ணவந்தாப் போல. உண்மையில் பகவத்கீதை என்பது சுயமுன்னேற்றநூல்.உலகில் எந்த ஃபாரின் ப்ரொபசரும் சொல்லாத அற்புதமான வழிகளை சொல்லியிருக்கிறார்.
அவரை பகவானாக பார்க்கவேண்டாம். ஒரு பெரும் சாம்ராஜ்யத்திற்காக இந்த நாடே இரண்டாக பிளவுபட்டுக் கிடந்தபோது அத்தனைபேரையும் மிகச் சாமார்த்தியமாக வழி நடத்திச் சென்றவனாக பார்க்கலாமே!அவன் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட நிலையிலும் மகோன்னதமாக எப்படி வெற்றி பெறுவது என்பதைச் சொன்னவன்.
(சொல்லப்போனால் ஒரு இடத்தில் கூட சிவன்,விஷ்ணு,அம்மன் என எந்த தெய்வத்தையும் குறிப்பிடவில்லை.முழுக்க,முழுக்க வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி என்று பேசும் நூல்.)
அதிலே உன்னை நீ அறிந்துகொண்டால் வெற்றிபெறுவாய் என்று பேசுகிறார்.எதைச்செய்தாலும் என்ன கிடைக்கும் ,என்ன கிடைக்கும் என்று அலையாதே, உனக்கு எதைச்செய்ய விதித்திருக்கிற்தோ அதை முழுமனதோடு செய்.``என்கிறார்.
வெளிநாட்டுப் புத்தகங்களையெல்லாம் விழுந்து விழுந்து படிக்கும் ஆர்வலர்கள் ஒருமுறை கீதையைப் படித்துப் பாருங்கள்.நிறைய அற்புதமான விஷயங்கள் கிடைக்கும்.
சரி,பிரபுசாலமன்&மற்றவர்கள் பேசிய விஷயத்திற்கு வருவோம்.அங்கே பாவம் மிகப்பலரும் நல்ல திறமை இருந்தும் ஜொலிக்கமுடியாத நட்சத்திரங்களாகவே இருந்தார்கள்.
இவர்களும் தங்களைத் தாங்களே அலசிக்கொண்டால் மேல் நிலைக்கு வருவார்களோ!
ஆக மொத்தம் சிந்திக்கவைத்த நிகழ்ச்சி.
`

No comments:

Post a Comment